Monday 6th of May 2024 05:09:37 PM GMT

LANGUAGE - TAMIL
.
யாழ். ஆய்வுகூட பரிசோதனை: வடக்கில் மேலும் 21 பேர் உட்பட 38 பேருக்கு தொற்றுறுதி!

யாழ். ஆய்வுகூட பரிசோதனை: வடக்கில் மேலும் 21 பேர் உட்பட 38 பேருக்கு தொற்றுறுதி!


யாழ். ஆய்வுகூட்களில் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வடக்கு மாகாணத்தில் மேலும் 21 பேர் உட்பட 38 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக் கழக மருத்துவபீடம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை ஆகிய ஆய்வுகூடங்களில் இன்றைய தினம் (ஏப்-21) 788 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இவ்வாறு வடக்கு மாகாணத்தில் 21 பேர் உட்பட 38 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக,

யாழ். மாவட்டம் - 15

யாழ். சுகாதார அதிகாரி பிரிவு - 11 பேர் (அனைவரும் பொலிசார்)

யாழ். போதனா வைத்தியசாலையில் - 02 பேர்

நல்லூர் சுகாதார அதிகாரி பிரிவு - 01

கோப்பாய் சுகாதார அதிகாரி பிரிவு - 01

மன்னார் மாவட்டம் - 05 (மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில்)

முல்லைத்தீவு மாவட்டம் - 01 (மல்லாவி ஆதார வைத்தியசாலையில்)

இவ்வாறு வட மாகாணத்தில் 21 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன்,

வவுனியா மாவட்டம் - 15

பம்பைமடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையம் - 13

வெள்ளாங்குளம் இலங்கை விமானப்படை முகாம் - 02

கிளிநொச்சி மாவட்டம் - 02 (பாரதிபுரம் தனிமைப்படுத்தல் நிலையம்)


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, நல்லூர்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE